அறிமுகம் - இலங்கை முன்னாள் முஸ்லிம்கள்

இஸ்லாம் இறைவனிடமிருந்து வந்த இறுதி வழிகாட்டல், முஹமது இறைவனின் இறுதித் தூதர், குர்ஆன் இறைவேதம், முஹமது நமது உயிரினும் மேலானவர், உத்தமமானவர் போன்ற நம்பிக்கைகள் முஸ்லிம்களாக பிறந்த எமக்கு சிறுவயது முதலே ஊட்டப்பட்டன. எனினும் கல்வி வளர்ச்சி, சிந்தனை விருத்தி, பரந்துபட்ட வாசிப்பு ஆகியவற்றின் தாக்கம் காரணமாக, இஸ்லாம் குறித்து அதன் மூலாதாரங்களில் இருந்தே ஆராய்ந்த பொழுது, அவற்றில் இறைவேதம் என்பதற்குப் பொருத்தமற்ற பல அபத்தங்களும், அறிவியலுக்கும், மனித வாழ்க்கைக்கும் பொருந்தத தன்மைகளும் காணப்பட்டதனை தெளிவாக உணர முடிந்தது.